Tuesday, August 11, 2009

நிகழாத்தகவு!



ஜனிக்கும் போது மௌனிக்கிறாய்
மரிக்கும் போது சந்தோஷிகிறாய்
எனது விரும்புதலும்
உனது பிரதிபலிப்பும்
எதிர்மாறோ?

Saturday, August 8, 2009

மலரினும்



சுகந்தம் பரப்பிக்கொண்டே நடக்கும் நீ
எதற்கும் கொஞ்சம் சுற்றமும் பார்த்து நட.,
மலரென்று நினைத்து வண்டுகள்
மகரந்தம் வைத்து விடப் போகின்றன ...

நீயின்றி



எனது அடர்ந்த தனித்த இரவுகளில்
தொடர்ந்து படர்ந்துக் கொண்டிருக்கிறது
உடைந்த வார்த்தைகளால் நிரம்பிய
கவிதைகளுடன் உனது நினைவுகள்

Friday, August 7, 2009

காதல் நிறைந்தவன்


காற்று நிறைந்த பலூனை வைத்து
குழந்தை விளையாடுவதைப் போல
காதல் நிறைந்த என்னை வைத்து
நீ விளையாடுகிறாய் ...

அவளின்றி


அவள் வராத காலம் - என்
வனத்திற்கு இலையுதிர் காலம்.,
மனத்திற்கு கொலையுதிர் காலம்.

எங்கெங்கும்


எனது பேனா காகிதங்களை
முத்தமிடும் போது எழும் சத்தமெல்லாம்
உனது பெயர்தான்...