கூழானாலும் குளித்துக் குடி...
குளித்து முடித்திருக்கிறேன்...
பொருமியது பசித்தவன் வயிறு!
கந்தையானாலும் கசக்கிக் கட்டு...
கசக்கிக் கசக்கியே கந்தையானால்?
சினத்துடன் சலவைத் தொழிலாளி!
ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாதாம்...
சிரித்துக் கொண்டேச் சென்றாள்
கூன் விழுந்த கிழவி!
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்...
நகைத்து மறைந்தது நிலவு!

.jpg)
