Friday, August 4, 2017

சிலம்பு

பிழைத்தோருக்கோ
பிழைத்தவருக்கோ
கூற்றென்றொன்றுண்டு
அறமென்றொன்றுண்டா?
அரசியலில்.

Thursday, August 3, 2017

மனு

அந்தண மகனை அடுத்தவூரணுப்பு
சத்திரியச்சேய்கு மயிருடண் அபராதமாயிரம்
சொத்தைப்பறித்துச்சிறையிலடை வைசியனை
சூத்திரணைக் கொன்றுவிடு
நாப்பிள்ளைத்தந்தை நாட்டாமை
வருணத்தில் பலாத்கார வலிமாறுமா?
மனு உரைத்தது தர்மமா?

Monday, July 31, 2017

மழை

பெரும்மழை பெய்துரைத்ததின்று 
நாட்டினில் நல்லவருடெண்று
தேடிப்பிடிப்பதெம் கடமை. உனதும்.
ஆள்பவரிடையேத்தேடினில் யாம் மூடன். நீயும்.

Wednesday, September 7, 2011

நாம் தமிழர்


செங்கொடியின் இறுதி ஊர்வலத்திற்கு
கூடியவர்களை விட
மங்காத்தாவின் முதல் காட்சிக்கு
குவிந்தவர்கள் அதிகம் !

Saturday, November 28, 2009

பழமொழிகள் ஜாக்கிரதை


கூழானாலும் குளித்துக் குடி...
குளித்து முடித்திருக்கிறேன்...
பொருமியது பசித்தவன் வயிறு!

கந்தையானாலும் கசக்கிக் கட்டு...
கசக்கிக் கசக்கியே கந்தையானால்?
சினத்துடன் சலவைத் தொழிலாளி!

ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாதாம்...
சிரித்துக் கொண்டேச் சென்றாள்
கூன் விழுந்த கிழவி!

அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்...
நகைத்து மறைந்தது நிலவு!

காற்றின் வழி


கைகள் படாத புத்தகப் பக்கங்களின்
கன்னித் தன்மையைக்
கவர்ந்து செல்கிறது காற்று

குழந்தை மனம்


மெல்லிய சோகம் இழையோடும்
நீண்ட தூர இரயில் பயணத்தில்
ஜன்னல்களுக்கு வெளியே கைகளை ஆட்டி மகிழும்
குழந்தைகளின் சிரிப்பில்
ஜில்லென்றானது மனம்.